உள்ளுராட்சி மன்றங்களின் ஆளணி மீளாய்வு தொடர்பாக திறைசேரியின் முகாமைத்துவச் சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஆலோசனைகளுக்கு அமையவும், தேவையற்ற நிர்வாகச் செலவுகளைக் குறைத்து நல்லூர்ப் பிரதேச சபையின் ஆளணிகளை ஒருங்கிணைத்துப் பொதுமக்களுக்கு வீண் அலைச்சல் அற்ற வினைத் திறனான சேவையினை ஒரே கூரையின் கீழ் வழங்கும் பொருட்டும் நல்லூர் பிரதேச சபையின் நல்லூர் மற்றும் கொக்குவில் உப அலுவலகங்களை நல்லூர்ப் பிரதேச சபையின் தலைமை அலுவலகத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நல்லூர்ப் பிரதேச சபையின் பத்மநாதன் மயூரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று புதன்கிழமை (21.01.2026) மாலை அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.