விவசாயிகள் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் அறுவடை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 15 லீற்றர் எரிபொருளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், வயல் நிலங்களை உழுதல் போன்ற ஆரம்பக்கட்ட பணிகளுக்காக 20 லீற்றர் எரிபொருள் வழங்கப்படும் என அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு தற்போதைய கிவ்.ஆர் முறைமை அவசியமில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.