கட்டான - மஹா ஹூணுபிட்டிய பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று வெள்ளிக்கிழமை (13) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் மஹா ஹூணுபிட்டிய பகுதியை சேர்ந்த 42 வயதுடைய் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபருக்கும் மற்றுமொரு நபருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதையடுத்து, இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரைக் கைது செய்வதற்காக கட்டான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கட்டானவில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space