கொலை செய்யப்பட்டு எரித்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கைது!
Ad Space
Ad Space
Ad Space
தலாத்துஓயா பகுதியில் இடம்பெற்ற மனிதக் கொலைச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்களைத் தலாத்துஓயா பொலிஸார் கைது செய்துள்ளனர்.தலாத்துஓயா , பவ்லான பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் 04 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகக் திங்கட்கிழமை (07) பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் போது, காணாமல் போன நபரின் எரிக்கப்பட்ட சடலம் பவ்லான வனப்பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. இதன் பின்னரே இதுவொரு கொலையென வெளிச்சத்திற்கு வந்தது.இச் சம்பவத்தில் தலாத்துஓயா பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.இக் குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய 18 மற்றும் 41 வயதுடைய அதே பகுதியைச் சேர்ந்த இரு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.தனிப்பட்ட பகை காரணமாகவே இக் கொலை இடம்பெற்றுள்ளதோடு, சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தடியினால் அடித்துக் கொலை செய்துவிட்டு, பின்னர் சடலத்தை எரித்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.மேலும், இச் சம்பவம் தொடர்பில் தலாத்துஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Ad Space
Ad Space
Ad Space