மத்துகம பொலிஸ் நிலையத்திலிருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 10 தோட்டாக்கள் காணாமல்போன சம்பவம் தொடர்பில், பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் கான்ஸ்டபிள் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 26ஆம் திகதி முதல், குறித்த கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் காணாமல்போயுள்ளதாக ஆவண சோதனையின் போது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து மத்துகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.