இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவ்வேதி மற்றும் இலங்கையின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் (ஓய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர ஆகியோருக்கிடையிலான சந்திப்பு, கொழும்பிலுள்ள பாதுகாப்பு பிரதி அமைச்சர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.

இந்திய இராணுவத் தளபதி மற்றும் குழுவினரின் தலைமையில், நேற்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டை வந்தடைந்தனர்.

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவ்வேதியை பாதுகாப்பு பிரதி அமைச்சர் அன்புடன் வரவேற்றதுடன், இரு தரப்பினருக்கும் இடையே சுமுகமான கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

அண்டை நாடுகளான இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாறு, கலாச்சார மற்றும் நாகரிக உறவுகளை இரு தரப்பினரும் இதன்போது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.