தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலய முன்னாள் பெருந் தலைவரும், பிரபல சைவத்தமிழ் அறிஞருமான சிவத்தமிழ்ச்செல்வி.கலாநிதி.தங்கம்மா அப்பாக்குட்டியின் பதினெட்டாவது ஆண்டு குருபூசை வைபவம் இன்று வெள்ளிக்கிழமை (26.06.2026) காலை யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீ  துர்க்காதேவி ஆலய வளாகத்திலுள்ள அன்னபூரணி மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் ஆலய ஸ்தானிக சிவாச்சாரியார் சிவஸ்ரீ. சாம்ப.சோமதேவக் குருக்கள், ஆனைக்கோட்டை கரைப்பிரான் ஆதிவிநாயகர் ஆலய ஆதீனகர்த்தா சிவஸ்ரீ.சோம.சிவகுமாரக் குருக்கள் ஆகிய இரண்டு மூத்த சிவாச்சாரியார்களும் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.