முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வரும் 5ஆம் திகதி திங்கட்கிழமை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் (FCID) முன்னிலையாகவில்லை என்றால், அவரை கைது செய்ய நீதிமன்ற பிடியாணை பெறப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியை தவறாக பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இந்த விசாரணை நடைபெறுகிறது.
இதே வழக்கில், சதொச நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் இந்திக ரத்னமலல கைது செய்யப்பட்டு, 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர், முன்னாள் அமைச்சரின் மகன் ஜொஹான் பெர்னாண்டோவுக்கு போலி ஆவணங்களை தயாரித்துக் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஜோன்ஸ்டன் மீது பிடியாணை நடவடிக்கை!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space