ஒரு காலத்தில் வடதமிழக அரசியலில், அண்ணனும் தம்பியுமாக வர்ணிக்கப்பட்டவர்கள் பாமக நிறுவனர் ராமதாஸும் விசிக தலைவர் திருமாவளவனும். ஆனால், தருமபுரி மற்றும் மரக்காணம் கலவரங்களுக்குப் பிறகு இருவரும் கீரியும் பாம்புமாக மாறி விட்டனர்.
“வட தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்களுக்கு பாமக-வும், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸும் தான் காரணம்” என பகிரங்கமாக திருமாவளவன் குற்றஞ்சாட்டினார். மேலும், “ஒரு போதும் மதவாத கட்சியான பாஜக-வுக்கும் சாதியவாத கட்சியான பாமக-வும் இடம்பெறும் கூட்டணியில் இருக்க மாட்டோம்” என்றும் அறிவித்தார் திருமா.
இந்த நிலையில், பாமக-வில் தந்தைக்கும் மகனுக்கும் நடக்கும் யுத்தத்தின் காரணமாக திருமா இருக்கும் திமுக கூட்டணிக்கு வரவேண்டிய சூழல் ராமதாஸுக்கு ஏற்பட்டிருக்கிறது. ராமதாஸ் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தினால் சிறுத்தைகள் கோபித்துக் கொள்வார்களோ என்று நினைத்து திமுக இந்த விஷயத்தில் எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறது. இந்த நிலையில், திருமாவுக்கு ராமதாஸ் தரப்பிலிருந்தே தூது அனுப்பப்பட்டிருப்பதாக ஒரு தகவல் கசிகிறது.
நேற்று முன்தினம் இரவு தைலாபுரத்தில் நடந்த பாமக-வின் நிர்வாகக் குழு அவசரக் கூட்டத்தில், “அன்புமணி இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையக் கூடாது” என கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, செயல்தலைவரான ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்தி, இணை பொதுச்செயலாளர் அருள் எம்எல்ஏ உள்ளிட்டவர்கள் ராமதாஸிடம் வலியுறுத்தி இருக்கின்றனர். திமுக கூட்டணியில் இணைவதே ராஜதந்திரமாக இருக்கும் என்பதையும் அவர்கள் ராமதாஸுக்கு எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள்.
தனித்து விடப்பட்டதால் தவிப்பு: திருமாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் தைலாபுரம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space