ஈழத் தமிழின விடுதலைப் போராட்டத்தின் முன்னோடியும், முதற் தற்கொடையாளருமான தியாகி பொன்.சிவகுமாரனின் 52 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (05.06.2026) காலை-08 மணியளவில் யாழ். உரும்பிராய்ச் சந்திக்கு அருகிலுள்ள பொன்.சிவகுமாரனின் உருவச் சிலையடியில் எழுச்சிபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இதனை முன்னிட்டுப் பொன்.சிவகுமாரனின் உருவச் சிலையடி மற்றும் அதனை அண்டியுள்ள இடங்களில் சிவப்பு, மஞ்சள் நிறங்களிலான கொடிகள் கட்டப்பட்டு எழுச்சி பூண்டுள்ளது.