திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரரை பார்வையிடுவதற்காக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, பத்தரமுல்ல சீலரத்ன தேரர் மற்றும் அரிசிமலை விகாராதிபதி பானாமூரே திலகவங்ஸ நாயக்க தேரர் உள்ளிட்ட பலர் இன்று வெள்ளிக்கிழமை (16) திருகோணமலை சிறைச்சாலைக்கு வருகை தந்து கஸ்ஸப தேரரை சந்தித்து சுகம் விசாரித்து சென்றனர்.

இன்று காலை 10.00 மணியளவில் சிறைச்சாலைக்குள் சென்ற முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச 1 மணி நேரத்திற்கு மேலாக கஸ்ஸப தேரருடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.