நல்லூர்ப் பிரதேச சபையின் நல்லூர் நாதம் இதழ் வெளியீட்டு நிகழ்வு செவ்வாய்க்கிழமை (28.04.2026) முற்பகல்-11 மணியளவில் நல்லூர்ப் பிரதேச சபை மண்டபத்தில் நல்லூர்ப் பிரதே சபையின் தவிசாளர் பத்மநாதன் மயூரன் தலைமையில் நடைபெற்றது.

நல்லூர் நாதம் இதழினை நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் திருமதி. கௌரி முகுந்தன் வெளியீடு செய்து வைக்க நல்லூர்ப் பிரதேச சபை உறுப்பினர் தியாகமூர்த்தி, பிரதேச சபை  உறுப்பினர் ஸ்ரீகணேசா, நல்லூர்ப் பிரதேச சபையின் செயலாளர் ஜெலீபன் ஆகியோர் இணைந்து முதற் பிரதியைப் பெற்றுக் கொண்டனர்.