பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாணந்துறை கடலில் நீராடச்சென்று, கடல் அலையில் சிக்கி கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை (15) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

அப்போது கடற்கரையில் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பாணந்துறை பொலிஸ் உயிர்காக்கும் படையினரான பொலிஸ் ஆய்வாளர் ஹேவகே, பொலிஸ் சார்ஜன்ட் ஞானரத்ன, கத்ரியாராச்சி, பொலிஸ் கான்ஸ்டபிள் லக்மால் மற்றும் தசுன் ஆகியோரால் குறித்த நபர் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கெஸ்பேவ பகுதியை சேர்ந்த 52 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.