இலங்கையில் சுமார் 15 இலட்சம் பேர் (பெரியவர்கள்) புகைத்தலில் ஈடுபடுகின்றனர். எமது நாட்டில் தினமும் புகைபிடிப்பவர்கள் 50 பேர் அகால மரணத்தை தழுவுகின்றனர் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC ) தெரிவித்துள்ளது.
இலங்கையின் புகையிலை கட்டுப்பாட்டு முயற்சிகளில் புகையிலைத் துறையின் தலையீடுகள் ஏற்படுத்தும் தாக்கம் - சர்வதேச மற்றும் இலங்கை புகையிலைத் துறை தலையீடுகளின் குறியீட்டு என்ற தலைப்பில் இன்று புதன்கிழமை (7) கொழும்பு மரியட் ஹோட்டலில் நடத்திய ஊடக மாநாட்டை மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC ) ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டதோடு துறை சார்ந்த விற்பன்னர்கள் ,வைத்தியர்களின் கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டன.
இலங்கையில் வைத்தியர் எரந்திக்க பத்திராஜா, வைத்தியர் பாலித்த தென்னக்கோன், வைத்தியர் ஆர்.எப். ராஜேந்திரா, வைத்தியர் பாலித்த தென்னக்கோன் மற்றும் அடிக் பணிப்பாளர் ஆகியோர்களும் உரையாற்றினார்கள்.
இங்கு கருத்து தெரிவிக்கையில் இலங்கையில் நீண்ட காலமாக புகையிலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலும் பொது சுகாதாரத்திற்கான பாரிய அச்சுறுத்தல் புகையிலை பாவனை இன்னமும் காணப்படுகின்றது. இலங்கையில் சுமார் 15 இலட்சம் பேர் (பெரியவர்கள் ) புகைத்தலில் ஈடுபடுகின்றனர். எமது நாட்டில் தினமும் புகைபிடிப்பவர்கள் 50 பேர் அகால மரணத்தை தழுவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இலங்கையில் 83 வீதமான இறப்புக்கள் தொற்றா நோய்களினால் ஏற்படுகின்றன. புகையிலை பாவனையானது தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கு ஏதுவாக இருக்கும் நான்கு காரணங்கள் முதன்மை காரணமாக விளங்குகிறது. இந்நிலையில் நாட்டின் பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலைமையாகும். இலங்கையர்கள் தினமும் ரூபா 520 மில்லியன்களை சிக்ரட் புகைப்பதற்கு செலவிடுகின்றனர்.
ஒவ்வொரு நிமிடத்திற்கு 10 பேர் இறந்த வண்ணம் இருக்கின்றனர். இது தனி மனிதனின் குடும்பத்தின் ஒரு சமூகத்தின் பொருளாதார சரிவுக்கு காரணமாகவும் அமைகின்றது.
இந்த சவால்களை இலக்கு வைத்து தனது நிறுவனத்தின் லாபத்தை நிலைநாட்டுவதற்கு சரிந்து வரும் வாடிக்கையாளர்களை தொடர்ந்து புகையிலை நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் பொது சுகாதாரம் நேரடியாக பாதிப்படைகின்றது குறிப்பிடத்தக்கது.
புகையிலை கட்டுப்பாட்டிற்கான கட்டமைப்பு FCTC) உடன்படிக்கை பங்கேற்றுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் 5.3 மற்றும் அதற்கான வழிகாட்டுதல் மூலம் தங்களின் சுகாதாரக் கொள்கைகள் பாதுகாக்க வேண்டியது முக்கியமான பொறுப்பாகும்.
வணிக நலன்கள் மற்றும் பிற தனிப்பட்ட நலன்களின் தலையீடு லிருந்து பொது சுகாதாரக் கொள்கைகள் பாதுகாப்பதற்காக உறுப்பு நாடுகளுக்கு அதிகாரமும் வழிகாட்டுதலும் வழங்குகின்றமைக்கு் குறிப்பிடத்தக்கது.
2019 ஆம் ஆண்டு தொடக்கம் கணிக்கப்பட்டு வருகின்ற TII குறியீடு அரசாங்கம் WHO, FCTC கொள்கையின் 5.3 பிரிவுக்கு கீழ் குறிப்பிடப்படும் நடவடிக்கைகளை எவ்வாறு செயற்படுத்துகின்றன என்பதை சிவில் சமுகங்கள் இணைந்து இரண்டு வருடங்களுக்கு ஓரு முறை கண்காணிக்கும் குறியீடாகும்.
2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கான TII குறியீட்டின் பிரதான முடிபுகள் 2025 ஆண்டு சர்வதேச TII குறியீட்டு கணக்கெடுப்பில் இலங்கை 45 ஆம் இடத்தில் உள்ளது. 2023 ஆண்டு ஒப்பிடும்போது 2025 ஆண்டின் நிலை 03 3 நிலைகளில் பின்னடைந்துள்ளது.
புகையிலை நிறுவனத்தின் சமூக பொறுப்பு என்னும் போர்வையில் நியாயமற்ற செயற்பாடுகளை பசுமை எனும் பெயரில் ஏமாற்றி தமது நிறுவனத்திற்கான விம்பத்தை ஏற்படுத்துகின்றன.
புகையிலை பொருட்கள் மீதான முறையான மற்றும் விஞ்ஞான ரீதியான வரிக்கொள்கைகளை அமுல்படுத்தி புகையிலை நிறுவனத்திடமிருந்து வரிகளை சேகரித்தல்
தனி சிகரெட் விற்பனையை தடை செய்தல்
கல்வி நிறுவனங்கள் மற்றும் சமய தலங்களில் இருந்து 100 மீட்டர் துாரத்திற்கு புகையிலை பொருட்களின் விற்பனையை தடை செய்தல்.
NATA சட்டத்தை மீறும் இடத்து அவை குற்றச் செயல் என்பதை உறுதிப்படுத்துதல்
NATA சட்டங்கள் மீறப்படும் இடத்து அவற்றிக்கு விதிக்கப்படும் தண்டம் பணத்தை அளவை அதிகரித்தல்
புகையிலை பயிர்ச்செய்கை விடுத்து மாற்றுப் பயிர் செய்கைக்கு மாற்றமடைவதற்கான புகையிலை பயிர்ச்செய்கை யாளர்களை ஊக்குவித்தல்
வெற்றுப் பொதியில் முறைமையை அமுல்படுத்தல்
வணிக நலன்களை விட பொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை வாங்குவதற்காகவும் புகையிலை கட்டுப்பாட்டுக் கொள்கைகளை மேலும் தாமதமின்றி உருவாக்கி அவற்றை திறம்பட அமல்படுத்த வேண்டும்.
புகைபிடிப்பதால் நாட்டில் தினமும் 50 பேர் அகால மரணம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space