மதவாச்சி - கடவத்கம பகுதியில், தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை (16) இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும், அவரது மூத்த மகனுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
16ஆம் திகதி காலை, குறித்த நபர் தலையில் காயங்களுடன் வீட்டின் முற்றத்தில் இறந்து கிடந்துள்ளார்.
உயிரிழந்தவர் தனது மூத்த மகனுடன் மது அருந்தியதாகவும், இதன்போது இருவருக்கும் இடையிலான வாக்குவாதத்தில் அவரை அடித்து கொலை செய்ததாகவும், சந்தேகநபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் மதவாச்சி, கடவத்கம பகுதியைச் சேர்ந்த 67 வயதுடையவர் என தெரியவந்துள்ளது
42 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மதவாச்சியில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space