மத்துகமவின் நெபோடா பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
சனிக்கிழமை (11) பிற்பகல் அங்கு வந்த ஒரு குழுவினரால் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி 56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கிறது.
இருப்பினும், உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை, மேலும் இச்சம்பவம் குறித்த பொலிஸாரின் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.