2020 ஆம் ஆண்டு கொழும்பு குற்றப்பிரிவின் காவலில் இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்ட பாதாள உலகக் கும்பல் தலைவரான மாகந்துரே மதுஷின் மரணம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை தற்போது சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்த சர்ச்சைக்குரிய கொலைச் சம்பவம் 2020 ஒக்டோபர் 20 ஆம் திகதி மாளிகாவத்தை பகுதியில் இடம்பெற்றது.
மதுஷ் வழங்கிய தகவலின்படி, மறைத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படும் போதைப்பொருள் குவியலை கண்டுபிடிப்பதற்காக கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளால் சம்பந்தப்பட்ட பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, உடனடியாகச் செயல்பட்ட இரண்டு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி அவரைக் கொன்றனர்.
இந்த வழக்கின் விசாரணை பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
கொலை செய்யப்பட்ட மாகந்துரே மதுஷின் சகோதரர் ஒருவர் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிய முறைபாடு மற்றும் சிறப்பு கோரிக்கையை கருத்தில் கொண்டு பொலிஸ் மா அதிபர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
மாகந்துரே மதுஷின் மரணத்தில் புதிய திருப்பம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space