முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரிஆரச்சி கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை இன்று(16.04.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கெஸ்பேவ நீதவான் நீதிமன்றினால் பெறப்பட்ட சோதனையிடல் பிடியாணையின் அடிப்படையில், அவரது வீட்டில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, இரண்டு ரி-56 ரக மெகசின்கள், 221-க்கும் மேற்பட்ட ரவைகள் மற்றும் இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.