யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் தற்போது ஓ பாசிட்டிவ் குருதி வகைக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

எனவே, குறித்த வகைக் குருதியை உடையவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கிக்கு நேரடியாக வருகை தந்து குருதிக் கொடை வழங்கி ஒத்துழைப்பு வழங்குமாறு மேற்படி வைத்தியசாலையின் இரத்தவங்கிப் பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.