வவுனியா - வாரிக்குட்டியூர் பகுதியில் மோட்டர் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை (06) தெரிவித்தனர்.
வவுனியா, வாரிக்குட்டியூர் பகுதியில் மோட்டர் சைக்கிளில் நேற்று வியாழக்கிழமை (05) இரு மாணவர்கள் பயணித்த போது மோட்டர் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஒரு மாணவன் மரணமடைந்துள்ளார்.
இவ்விபத்தில் வாரிக்குட்டியூர் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் கரிஸ்ணன் (வயது 16) என்ற மாணவனே மரணமடைந்தவராவார். இது தொடர்பில் பூவரசன்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கெண்டு வருகின்றனர்.
வவுனியா - வாரிக்குட்டியூரில் மோட்டர் சைக்கிள் விபத்து ; மாணவன் பலி
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space