இரத்தினபுரி - சன்னஸ்கம பகுதியில் வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட மோட்டார் சைக்கிள்களை  விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட ஒருவர் பலாங்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பல மாதங்களாக இரத்தினபுரி, பலாங்கொடை உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து மோட்டார் சைக்கிள்களை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்டுள்ளதாகவும், உரிமையாளர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள்களின் பதிவு புத்தகங்களை எடுத்துச் சென்றுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து  6 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.சந்தேக நபர் பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.