இந்​திய கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் உள்​ளிட்ட 7 பேருக்கு விசிக சார்​பில் விருதுகளை அக்​கட்​சி​யின் தலை​வர் திரு​மாவளவன் வழங்கி கவுர​வித்​தார்.

ஒடுக்​கப்​பட்ட மக்​களின் நலன்​களுக்​காக பாடு​பட்டு வரும் பட்​டியலினம் அல்​லாத சான்​றோரை அடை​யாளம் கண்​டு, அவர்​களை ஊக்​கப்​படுத்​தும் வகை​யிலும் சமூகம், அரசி​யல் மற்​றும் கலை-இலக்​கி​யம் ஆகிய துறை​களில் அரும்​பணி​யாற்றி வரும் ஆளு​மை​களுக்​கும் கடந்த 2007-ம் ஆண்டு முதல் விசிக சார்​பில் விருதுகள் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன.




அம்​பேத்​கர் சுடர், பெரி​யார் ஒளி, காம​ராசர் கதிர், அயோத்​தி​தாசர் ஆதவன், காயிதேமில்​லத் பிறை மற்​றும் செம்​மொழி ஞாயிறு ஆகிய விருதுகளு​டன், 2022-ம் ஆண்டு முதல் ‘மார்க்ஸ் மாமணி’ என்ற விருதும் கூடு​தலாக வழங்​கப்​பட்டு வரு​கிறது.

இந்த ஆண்​டுக்​கான விசிக விருதுகள் வழங்​கும் விழா, சென்னை தேனாம்​பேட்​டை​யில் உள்ள காம​ராஜர் அரங்​கில் நேற்று நடை​பெற்​றது. விழாவுக்கு விசிக தலை​வர் திரு​மாவளவன் தலைமை தாங்​கி​னார்.








கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர்​கள் சிந்​தனைச் செல்​வன், ரவிக்​கு​மார் எம்​பி, பொருளாளர் எஸ்​.எஸ்​.​பாலாஜி, முதன்​மைச் செய​லா​ளர் ஆளூர் ஷா நவாஸ், சட்​டப்​பேரவை உறுப்​பினர் ஜோதி​மணி ஆகியோர் முன்​னிலை வகித்​தனர்.

சமூக நீதித்​துறை அமைச்​சர் வன்​னியரசு வரவேற்றுப் பேசி​னார். தகு​தி​யுரையை வாசித்த திரு​மாவளவன், 7 பேருக்​கான விருதுகளை​யும், ரூ.50 ஆயிரத்​துக்​கான பொற்​கிழியை​யும் வழங்​கி​னார்.