தமிழ் தேசிய நம்பிக்கையின் மீது உறுதி கொண்டு ஒரு குடையின் கீழ் தமிழின அடக்குமுறைக்கு எதிராக தமிழின விடுதலையை நோக்கி முனைப்புடன் தொடர்ந்து போராட எமது மக்கள் பலத்தை நம்பி தொடர்ந்து அடிபணியாது போராடுவோம் என முள்ளிவாய்க்கால் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் இன அழிப்புக்கு எதிரான தேசிய எழுச்சி நாளான இன்று திங்கட்கிழமை (மே 18)  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு வடக்கு - கிழக்கு, இந்த 17வது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பிரகடனத்தை வெளியிட்டுள்ளது.