அம்பாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மரேவீதி பகுதியில் தங்காலை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, வெளிநாட்டுத் தயாரிப்பு பிஸ்டல் ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை (12) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து வெளிநாட்டுத் தயாரிப்பு பிஸ்டல் ரக துப்பாக்கி 01, உயிருள்ள தோட்டாக்கள் 05 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர் ஹம்பாந்தோட்டை, மரேவீதி பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் ஹம்பாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space