ஷிரந்தி ராஜபக்ஷ இன்று சிங்கப்பூர் புறப்பட்டார்
Ad Space
Ad Space
Ad Space
முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (16) புதன்கிழமை அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளார்.ஒரு உறவினரும் அவருடன் புறப்பட்டுச் சென்றுள்ளார்.இவர்கள் இருவரும் இன்றையதினம் அதிகாலை 1:10 மணியளவில் 'சிங்கப்பூர் எயார்லைன்ஸ்' நிறுவனத்திற்குச் சொந்தமான SQ469 ரக விமானத்தில் சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (15) செவ்வாய்க்கிழமை தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, மேலதிக சிகிச்சைகளுக்காகச் சிங்கப்பூர் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Ad Space
Ad Space
Ad Space