சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முதல் கையொப்பத்தையிட்டு 24 நாட்கள் கடந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியாமலுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சபாநாயகரிடம் சமர்ப்பிக்க குறைந்தபட்சம் 20 எம்.பிக்கள் கையெழுத்திட வேண்டும். இன்னும் குறைந்தபட்சம் 20 கையொப்பங்களைப் பெற முடியவில்லை.