அகில இலங்கை சைவமகா சபை ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விரத நாளில் அறிவிக்கும் அன்பே சிவம் 2026 ஆம் ஆண்டுக்கான உயரிய விருது சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

கடந்த பல தசாப்தங்களாக அல்லலுறும் மக்களுக்கு மனிதநேய ஆன்மீகப் பணிகளை அளவிறந்த வகையில் ஆற்றி வருவதற்காகவே இந்த விருது வழங்கப்படவுள்ளதாக அகில இலங்கை சைவமகா சபை ஞாயிற்றுக்கிழமை (15.02.2026) அறிவித்துள்ளது.