கீரிமலை கருகம்பனை அந்திரானை கவுணாவத்தை நரசிங்க வைரவர் ஆலய வருடாந்த மரபுவழி வேள்விப் பொங்கல் விழா சனிக்கிழமை (06.06.2026) அதிகாலை இடம்பெற்றது.
இந்த வருட வேள்விப் பொங்கல் விழாவில் 350 இற்கும் மேற்பட்ட பெறுமதி வாய்ந்த கடாக்கள் வெட்டப்பட்டன. இம் முறை வேள்விப் பொங்கல் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.