இன்று ஜனவரி முதலாம் திகதியிலிருந்து கிராம பகுதிகளின், தேர்ந்தெடுக்கப்பட்ட 40 வழித்தடங்களில் (வீதிகளில்) இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவின்படி, செயல்படுத்தப்படும் இந்த திட்டத்திற்கு 2000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, முதற்கட்டமாக, இதுவரை பஸ்கள் இயக்கப்படாத கிராம பகுதிகளில் தெரிவுசெய்யப்பட்ட 40 வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படும்.