உயிர்த்த ஞாயிறு நள்ளிரவு ஆராதனை கிளிநொச்சி புனித திரேசாள் தேவாலயத்திலும் நடைபெற்றது.

கிளிநொச்சி மறைக்கோட்ட குருமுதல்வர் அருட்தந்தை கி.ஜெயக்குமார் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.இதில் ஆயிரகணக்கானோர் கலந்துக் கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.  அதேவேளை, மாவட்டத்திலுள்ள பல கிறிஸ்தவ தேவாலயங்களில் இந்த விசேட ஆராதனையினை முன்னிட்டு பொலிஸார், இராணுவத்தினர், விமானப்படையினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.