வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரர் ஆலயத் தைப்பூச உற்சவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (01.02.2026) காலை பக்திபூர்வமாகவும், சிறப்பாகவும் இடம்பெற்றது. இன்று காலை-07 மணியளவில் முருகப் பெருமானுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் ஆரம்பமாகியது.
வசந்தமண்டபப் பூஜையைத் தொடர்ந்து முருகப் பெருமான் உள்வீதி எழுந்தருளி உலா வரும் திருக்காட்சியும் நடந்தேறியது.