"என்று தணியும் சுதந்திரத் தாகம்" என்ற தலைப்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து விசேட கருத்தரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளன.யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு அருகில் அமைந்துள்ள வை.எம்.சி. மண்டபத்தில் இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி, மாலை 3 மணி தொடக்கம் 5 மணிவரை இந்தக் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

தமிழ்த் தேசியப் பேரவை இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.