சமகிபுர, ஊவா குடாஓயா பகுதியில் தனது வீட்டில் சூட்சுமமான முறையில் எரிபொருளைச் சேமித்து வைத்திருந்த பெண் ஒருவர் ஊவா குடாஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமகிபுர, ஊவா குடாஓயா பகுதியில் உள்ள வீடொன்றில் எரிபொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தப் சோதனை நடத்தப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சமகிபுர, ஊவா குடாஓயா பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.
இதன்போது 95 லீற்றர் பெற்றோல், 78 லீற்றர் டீசல் போன்ற எரிபொருள் கையிருப்பு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
குறித்த எரிபொருள் தொகுதியினை அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கத்தில் அவர் சேமித்து வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட பெண் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் குடாஓயா பொலிஸார் ஈடுபட்டுவருகின்றனர்.