பேலியகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துட்டகைமுணு மாவத்தையில் நேற்று (24) ஞாயிற்றுக்கிழமை கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் விஹாரகம - திவுலன்கடவல பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவருக்கும் மேலும் ஒரு குழுவினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு இந்த கொலை செய்யப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.