கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடவல பகுதியில் நேற்று திங்கட்கிழமை (29) சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 90 சட்டவிரோத மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் மினுவாங்கொடை பகுதியை சேர்ந்த 33 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இது குறித்து மேலதிக விசாரணைகள் கட்டுநாயக்க பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகிறது.