சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஞானச்சுடர் சித்திரை மாத இதழ் வெளியீடு
சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் ஞானச்சுடர் சித்திரை மாத சஞ்சிகையின் 340 ஆவது இதழ் வெளியீட்டு நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (24.04.2026) முற்பகல் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் ஒழுக்காற்று அதிகாரி ஐ.கோ.சந்திரசேகரம் மலரின் வெளியீட்டுரையையும், சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ. மோகனதாஸ் சுவாமிகள் மலரின் மதிப்பீட்டுரையையும் வழங்கினர்.