உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை தேசிய மக்கள் சக்தியின் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளனர்.

சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இல்லத்திற்கு கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன் மற்றும் ஜெ.ரஜீவன் ஆகியோர் நேரில் சென்று சுகம் விசாரித்து ஆறுதல் கூறினர்.

தனது இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் , சிகிச்சைக்காக சுமார் 80 இலட்ச ரூபாய் தேவைப்படுவதாகவும் ,அதற்கு உதவ வேண்டும் என சிவாஜிலிங்கம் பகிரங்கமாக கோரி இருந்தார். அதனை அடுத்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் பெருமளவானோர் நிதியுதவிகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.