சிறிலங்கா ஜனாதிபதியின் விசேட கருத்திட்டப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரும், முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளருமான சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (22) புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர் இன்றைய தினம் கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.