திருநெல்வேலியைச் சேர்ந்த பிரதேச மாணவர்களுக்கான புதிய அறநெறி வகுப்புக்களின் ஆரம்ப நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (04.07.2026) மாலை திருநெல்வேலியிலுள்ள யாழ்.முத்துத்தம்பி மகா வித்தியாலய முன்றலில் ஓய்வுநிலை அதிபர் இராமலிங்கக் குருக்கள் பசுபதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

ஆரம்ப நிகழ்வில் யாழ். முத்துத்தம்பி மகா வித்தியாலய அதிபர் ஆ. ரஜீவன்,  உப அதிபர் ஜே.பிரபாகரன், ஆசிரியர் ஞா. வேல்ரூபன், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டன.