தெஹிவளை - கல்கிஸ்ஸை பொது மயானத்திற்குள் இன்று (19) ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அங்கிருந்த நபரொருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் துப்பாக்கிதாரிகளை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.