கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நல்லூர் பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும் கலை இலக்கியப் பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை (06.02.2026) பிற்பகல்-02 மணி முதல் நல்லூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நல்லூர் பிரதேச செயலாளர் திருமதி.யசோதா உதயகுமார் தலைமையில் இடம்பெறும்.

இந் நிகழ்வில் யாழ்.மாவட்ட மேலதிக செயலாளர் கைலாசபிள்ளை சிவகரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்வார்.