போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் வங்கக்கடலில் காவியமான தளபதி கிட்டு உட்பட 10 மாவீரர்களின் 33 வது நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை(16.01.2026) காலை-09.30 மணியளவில் நல்லூர் முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள கிட்டுப் பூங்காவில் நடைபெறும்.
இந் நினைவேந்தல் நிகழ்வின் சிறப்பம்சமாக நல்லூர் தியாக தீபம் திலீபன் ஆவணக் காப்பத்தினால் உருவாக்கப்பட்ட 'கிட்டு ஒரு தனி மனித வரலாறு' எனும் தொனிப் பொருளுடன் கூடியதாக அமைக்கப்பட்ட தளபதி கிட்டுவின் வாழ்வியல் தொடர்பான ஆவணக் காட்சியகம் திறந்து வைக்கப்படவுள்ளது.