'பிள்ளையான்' என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவருக்கு விளக்கமறியல் நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவருக்கு இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
அதன்படி பிள்ளையான், எதிர்வரும் 24ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை குறித்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.