பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஒருசில தோட்டக்கம்பனிகளால் கொத்தடிமைகளாக  பயன்படுத்தப்படுவதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான எம்.எஸ் இன்டர்நெஷனல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில்  தொழில் அமைச்சும் பெருந்தோட்ட அமைச்சும் கலந்துரையாடி வருகிறோம். இது தொடர்பில் விரைவில் பதில் ஒன்றை வழங்க இருக்கிறோம் என பெருந்தோட்ட அமைச்சர் சமன்த வித்தியாரத்ன தெரிவித்தார்.

இன்று (09) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அமர்விலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.