தேசிய அனர்த்தமாக மாறியுள்ள நச்சுப் போதைப் பொருட்களிலிருந்து இலங்கைச் சமூகத்தை விடுவிக்கும் நோக்குடன் "முழு நாடுமே ஒன்றாக"  தேசிய செயற்பாட்டை அமுலாக்கும் முகமாக யாழ்.மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (16.01.2026)  பிற்பகல் யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரி மைதானத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் 7000 இற்கும் மேற்பட்ட மக்களின் பிரசன்னத்துடன் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின்தோட்டை நந்தராம தேரரை மதத் தலைவர்களுள் ஒருவராக முன்வரிசையில் அமர்த்தி முக்கியத்துவம் வழங்கப்பட்டிருப்பது தையிட்டியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணி உரிமையாளர்கள் உட்படப் பல்வேறு தரப்பினரிடையே கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.