யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதியாக எஸ்.சதீஸ்தரன் புதன்கிழமை (27.05.2026) புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதித்துறை சேவையில் விசேடதர அதிகாரியான சதீஸ்தரன் இந்தவருடம் மார்ச் மாதம்- 13 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் இலங்கையின் புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இவர் நீதித் துறையில் நீண்டகாலம் அனுபவம் மிக்க ஒருவருமாவார்.