ஹட்டனில் பொல்பிட்டிய பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒரு பெண் உயிரிழந்ததாகவும் மேலும் 3 பேரை காணவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
அப்பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழைக்கு மத்தியில் குறித்த வீட்டின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
இந்நிலையில் மண்சரிவு அனர்த்தத்தில் காணாமற்போனவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.