திருகோணமலை வெருகல் பிரதேசத்திலுள்ள ஏழு அறநெறிப் பாடசாலைகளைச் சேர்ந்த 300 மாணவர்களுக்குச் சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்தினரால் ஞாயிற்றுக்கிழமை (18.01.2026) மூன்று லட்சத்து 55 ஆயிரம் ரூபா பெறுமதியான புதிய சீருடைகள் கையளிக்கப்பட்டுள்ளன.

சீனம் வெளி, வட்டவான், கறுக்காமுனை, வாழைத்தோட்டம், உப்பூரல்,  முத்துச்சேனை, புன்னையடி ஆகிய அறநெறிப் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கே குறித்த புதிய சீருடைகள் கையளிக்கப்பட்டன.