போரின் போதும் இலங்கை பொருளாதாரம் வளர்ச்சியை அடைந்தது ; ரணில்

இலங்கையின் உள்நாட்டு போரின் போதும் தேசிய பொருளாதாரம் வளர்ச்சி பாதையை நோக்கியே சென்றது. எனவே மோதல்கள் ஒரு நாட்டின் வளர்ச்சியை பாதித்த விட கூடர்து என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,  காஷ்மீரில் பயங்கரவாதம் முடிவுக்கு வர வேண்டும். ஆனால் மற்ற பகுதிகளிலும்  பயங்கரவாதத்தை அழிக்க முடியும் என்பதற்கு என்ன உத்தரவாதம் என கேள்வி எழுப்பினார்.

இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பெங்களுரில், தி இந்து செய்தித்தாளின் ஐந்தாவது பதிப்பு தொடர்பாக நடைபெறும் சிறப்பு நிகழ்வில் பங்கேற்றுள்ளார்.

இதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில்,

இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள மிகப்பெரிய மக்கள் தொகை நாடாக இந்தியா உள்ளது. இது ஒரு முக்கோண உலகம், அதில் நாம் நமது பகுதியை கையாள்கிறோம்.

மேற்குலக நாடுகள் அமெரிக்காவால் வழிநடத்தப்படுகின்றன. கிழக்கு ஆசியா சீனாவால் வழிநடத்தப்படுகிறது. மேலும்  இந்தியா எமது பிராந்தியத்தை வழிநடத்த வேண்டும்.

இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் இடையிலான நெருக்கடியான நிலைமை தோற்றுவித்துள்ளது. இத்தகைய மோதல்கள் ஊடாக ஏற்பட கூடிய பொருளாதார நெருக்கடி மற்றும் தொழிலின்மையை கருத்தில் கொள்ள வில்லை என்றால்  பங்களாதேசத்திற்கு ஏற்பட்ட நிலைமை பாக்கிஸ்தானுக்கும் ஏற்படலாம்.

மறுபுறம் பாக்கிஸ்தானால் குண்டுவீசப்பட வாய்ப்புள்ள இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டுமா என்று அமெரிக்க முதலீட்டாளர்கள் சிந்தித்து வருகின்றனர்.

எவ்வாறாயினும் இலங்கை உள்நாட்டு போரின் போது பொருளாதார வளர்ச்சியை அடைந்தது. ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதம் முடிவுக்கு வர வேண்டும்.

ஆனால் ஏனைய பகுதிகளிலும் பயங்கரவாதத்தை அழிக்க முடியும் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது. எவ்வாறாயினும் மோதல் ஒரு நாட்டின் வளர்ச்சியை தடுத்து விடக்கூடாது. நாம் ஏன் எமது பிராந்தியத்தை ஒரு துணைக்கண்டம் என்று அழைக்கிறோம்? ‘நாம் ஏன் நம்மை ஒரு துணைக் கண்டம் என்று அழைக்கிறோம்?

தெற்காசியா என்று ஏன் அழைக்கப்படுகிறோம்? அந்த வார்த்தையை அமெரிக்க வெளியுறவுத்துறையிலிருந்து வந்துள்ளது. இரண்டாம் உலகப் போரில் இருமுனையாக இருந்த நாம் பனிப்போரின் போது மும்முனையாக மாறினோம்.

பின்னர் சோவியத் யூனியனுடன் ஒரு முனையாக மாறினோம். ஆனால் தற்போது சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் மும்முனையாக மாற முடியுமா என கேள்வியெழுப்பினார்.

சமீபத்திய செய்திகள்