அரச நிதி இணைய ஊடுருவல் விவகாரம் – விசாரணை தொடக்கம்

நிதி அமைச்சின் வெளி வளங்கள் திணைக்கள கணினி அமைப்பில் அங்கீகரிக்கப்படாத இணைய ஊடுருவல் நடந்துள்ளதாக இலங்கை அரசு ஒப்புக்கொண்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிதி தொகை குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

எதிர்க்கட்சிகள் சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் அரச நிதி தவறாக மாற்றப்பட்டிருக்கலாம் என குற்றம் சாட்டுகின்றன.

சம்பவம் தொடர்பாக காவல்துறை, கணினி குற்றப்பிரிவு மற்றும் நிதி புலனாய்வு பிரிவுக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 5 பேர் கொண்ட தொழில்நுட்பக் குழுவும் நியமிக்கப்பட்டு மேலதிக ஆய்வு நடைபெற்று வருகிறது.